search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தங்கமணி"

    நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு முடிவுகள் தெரிந்துவிடும் என அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார். #Thangamani #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிகவின் வருகைக்காக காத்திருப்பதால் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேமுதிகவின் வருகை குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு, தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.



    இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி, நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவுகள் தெரிந்துவிடும் என்றார்.

    “அரசியல் காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உண்மையான விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாக போராட்டம் உள்ளது. உயர் மின்கோபுர பிரச்சினை தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். #Thangamani #ADMKAlliance

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி பேசினார். #admk #parliamentelection

    நாமக்கல்:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் குளக்கரை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் அமைத்து இருக்கும் கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி யில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. இதை பொறுக்க முடியாமல் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் பேசிவருகிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

    நீங்கள் பேச, பேச எங்களின் வாக்கு வங்கி அதிகரிக்கும், உங்களின் கோபத்தின் வெளிப்பாடு எங்களின் வெற்றியை எளிதாக்கும்.

    தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் அந்த பொறுப்புக்கு வந்து உள்ளார். அவர் தலைவரான பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இதில் தோற்று விட்டால் தொண்டர்கள் நம்மை தலைவராக ஏற்கமாட்டார்கள் என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் இந்த அரசு மீது சேற்றை வாரி வீசி வருகிறார்.

    காங்கிரஸ் கூட்டணியில் மு.க.ஸ்டாலினை தவிர யாரும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. அவரும் மம்தா பானர்ஜி கூட்டத்தில் வேறு ஒரு கருத்தை சொல்லி வந்து உள்ளார். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி மலர வேண்டும்.

    நமது எதிரி கட்சி தி.மு.க. என்பதை ஜெயலலிதா நமக்கு அடையாளம் காண்பித்து சென்று உள்ளார். இதேபோல் அவர் இருக்கும் போதே டி.டி.வி. தினகரன் குடும்பத்தை விலக்கி வைத்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வரை சென்னைக்கே வராத டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வை காப்பாற்ற போகிறேன் என்று சொல்லி வருகிறார்.

    இதை தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தல் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் தேர்தல் என்பதை எண்ணி தொண்டர்கள் பணியாற்றிட வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்து கூறி ஓட்டுகளை சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் நாமக்கல் நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ். காளியப்பன், கரையாம்புதூர் மகேஷ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதையொட்டி செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி தம்பதி யினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    முன்னதாக ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் அமைக் கப்பட்டு உள்ள நாமக்கல் ரெயில் நிலைய சாலையை அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இதேபோல் நாமக்கல் குளக்கரை திடலில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவையும் திறந்து வைத்து பார்வையிட்டார். #admk #parliamentelection

    நாமக்கல்லில் ரூ.9 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் நாமக்கல் குளக்கரை திடலில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான கல்வெட்டை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கலெக்டர் ஆசியா மரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் மயில்சுந்தரம் மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
    சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #TNAssembly #MKStalin #Thangamani
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் மின் கசிவு இல்லாத புதைவிட மின் கம்பிகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பலமுறை இந்த சபையில் நான் வற்புறுத்தி இருக்கிறேன்.

    இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். என்றாலும் இதுவரை அந்த பணிகள் நடைபெறவில்லை. புதைவிட கம்பிகளை அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

    நான் சென்னை மேயராக இருந்தபோது பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் குழுவை அமைத்து ஆலோசனை செய்து மாநகராட்சி பணிகளை முடித்தோம்.

    அதுபோன்று ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்து கொளத்தூர் பகுதியில் புதை வடம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க அமைச்சர் ஏற்பாடு செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    சாலைகளை தோண்டி மின் கம்பி புதை வடங்களை புதைக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ஒரு இடத்தில் தோண்டும் போது தொலைபேசி கம்பி சிறிதளவு பாதிக்கப்பட்டதற்கு அந்த துறையினர் ரூ.60 லட்சம் நஷ்டஈடு கேட்டனர்.

    இது போன்ற காரணங்களால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, “சென்னையில் மொத்தம் 13 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதில் 6,500 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. மற்ற பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    தாம்பரம் பகுதியில் 1230 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதற்காக 443 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் புதைவிட கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #MKStalin #Thangamani
    தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani #Summer
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை.



    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வரை வேலை வேண்டும் என்பதற்காக கிராம சபை கூட்டங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு பிறகு தான் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani #Summer
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழக அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது? என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். #SterlitePlant
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    முன்னேறிய சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்திலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிய வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதை நிறைவேற்றினால் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்கு எதிராக அது அமையும்.

    தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் பெற்றார். வேலைவாய்ப்பு மட்டுமின்றி கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெறப்பட்டது.

    மண்டல் கமி‌ஷன் பரிந்துரையின்படி அமைந்த இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பயன் பெற்றார்கள்.

    பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்தது. அந்த நீதிபதிகளில் ஒருவரான ரத்தினவேல் பாண்டியன் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தற்போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாடு இதை அமல்படுத்துவதில் வெற்றி கண்ட மாநிலமாக இருக்கிறது.

    பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் கட்டி காத்த சமூகநீதிக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது. மத்திய அரசு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது.

    தமிழக அரசு இந்த இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்ப்பதுடன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


    நேற்று நான் பேசும் போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன். இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை. எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #DMK #MKStalin #SterlitePlant #Thangamani
    வேளச்சேரியில் புதிய துணை மின்நிலையத்திற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது வேளச்சேரியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று வாகை சந்திரசேகர் (தி.மு.க.) கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    "தமிழ்நாட்டில் 1600 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் பூமிக்கு அடியில் மின் கம்பி வடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உறுப்பினர் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து புதிய துணை மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

    இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Thangamani

    குடியாத்தம்:

    தமிழகத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் களப்பணிகளை அ.தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பூத்கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை என களப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களான மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு படிப்படியாக கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுக்கு டி.டி.வி.தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    அ.தி.மு.க., எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் யாரையும் இழுத்து சேர்க்கவில்லை. கழகத்தில் தானாக வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சிறப்பாக நிர்வாகத்தை கொண்டிருக்கின்றனர். அதனை பார்த்து தற்போது வரை கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.

    மற்ற கட்சிகளில் இருந்து அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை. இங்கு அனைவரும் வந்து சேரலாம் என்பது எங்கள் நோக்கம்.

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் சேர முயற்சி செய்தார். நாளை தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்றால் வேறு கட்சிக்கு சென்று விடுவார்.

    தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு தேவையான நிதியை பெற முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசை தொடர்ந்து கேட்டு வருகிறோம். விரைவில் மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி கிடைக்கும். இடைத்தேர்தலுக்காக கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangamani

    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் இவ்வாறு வழங்கப்படுவதை பார்த்து மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றுகின்றன. மாணவ, மாணவிகள் அரசின் உதவிகளை பெற்று பயனடைந்து தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக திகழ செய்ய வேண்டும், என்றார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கவேல், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, டி.சி.எம்.எஸ். தலைவர் மூர்த்தி, நகராட்சி முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணியம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Thangamani
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் கறம்பக்குடி, மழையூர், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதிகளில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.

    வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஐந்தாம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் மின்சார கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய பணியாளர்களை அமைச் சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கந்தர்வக் கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் சந்தித்து அவர்களுடன் உணவருந்திய காட்சி.

    மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் அவர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை எடுக்கப்படும்.

    இயற்கை பேரிடரின் போது எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மின் வாரிய ஊழியர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர். #GajaCyclone #Thangamani
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 199 நிவாரண முகாம்களில் 3 வேளை உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மின்சாரத்தை பொறுத்த வரை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மின்சார கட்டமைப்பு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களும், 201 துணை மின்நிலையங்களும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளது.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 3,787 மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் 1,518 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.

    மின் வினியோகத்தை பொறுத்தவரை திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #Gaja
    ‘கஜா’ புயல் ஏற்படுத்திய சேதத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இப்போது ஒவ்வொரு ஊர்களுக்கும் மின் இணைப்பு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் 110 கிமீ வேகத்தில் நாகை அருகே கரையை கடந்தபோது டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலின் கடுமையான தாக்கத்தில் 1,13,566 மின் கம்பங்கள், 1082 மின்மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன.

    மின் கம்பங்களை சீர் செய்து தூக்கி நிறுத்தும் பணியில் 25 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் இரவு- பகல் பாராது தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து பணியாற்றி வருகின்றனர்.

    மழை-வெயிலுக்கு ஒதுங்கி நிற்க இடம் இல்லாத வயல்கள், வெட்ட வெளியில் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு மின்கம்பங்களை தோளில் சுமந்து செல்கின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீருக்குள் நின்று கயிறு கட்டி மின் கம்பங்களை தூக்கி நிறுத்துகின்றனர். வயல் வெளியில் ரோட்டிலேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

    இவர்கள் செய்து வரும் பணி மெச்சத்தக்கது. இதற்காக நான் மின்வாரிய ஊழியர்களை மனதார பாராட்டுகிறேன். பணியின்போது 2 மின் வாரிய ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையாக உள்ளது. அவர்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் தலா ரூ.15 லட்சம் உதவியும், அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    போர்க்கால அடிப்படையில் மின் ஊழியர்கள் பணியாற்றி வருவதால் நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் மின் இணைப்பு கொடுத்துவிட்டோம். பேரூராட்சி பகுதிகளில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

    வேதாரண்யம் நகரில் டவர் விழுந்து விட்டதால் அது சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் அதையும் சரி செய்து மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    கிராம பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு ஊராக சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மின் கம்பங்கள் அதிகமாக தேவைப்படுவதால் ஆந்திராவில் இருந்து கூடுதலாக மின் கம்பங்களை வரவழைத்துள்ளோம். புயல் பாதித்த நாளில் இருந்து நானும் அங்கேயே முகாமிட்டு பணிகளை துரிப்படுத்தி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகை மாவட்டம் மானுவக்காட்டுப் பாளையத்தில் மின்சார சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின் ஊழியர் முருகேசன் குடும்பத்துக்கு அமைச்சர் தங்கமணி ரூ.2 லட்சம் உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200 கோடி நிதி வழங்கி உள்ளதாகவும், ஒரு வாரத்தில் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
    ×